என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்10 March 2021 4:04 AM GMT (Updated: 10 March 2021 4:04 AM GMT)
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. பக்தர்கள் 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.
இன்று மதியம் முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு, பள்ளியாடி ஆகிய 12 சிவாலயங்களில் வழிபட்டு இரவு தூங்காமல் இருந்து சிவபெருமானை வழிபட்டு சிவராத்திரி புனித பயணம் நிறைவு செய்கிறார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கோபாலா.. கோவிந்தா.. என்ற சரண கோஷம் எழுப்பி கையில் பனை ஓலை விசிறியுடன் 110 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்குவார்கள். மேலும், பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
இன்று மதியம் முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு, பள்ளியாடி ஆகிய 12 சிவாலயங்களில் வழிபட்டு இரவு தூங்காமல் இருந்து சிவபெருமானை வழிபட்டு சிவராத்திரி புனித பயணம் நிறைவு செய்கிறார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கோபாலா.. கோவிந்தா.. என்ற சரண கோஷம் எழுப்பி கையில் பனை ஓலை விசிறியுடன் 110 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்குவார்கள். மேலும், பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X