
இன்று மதியம் முதல் திருத்தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிகோடு, பள்ளியாடி ஆகிய 12 சிவாலயங்களில் வழிபட்டு இரவு தூங்காமல் இருந்து சிவபெருமானை வழிபட்டு சிவராத்திரி புனித பயணம் நிறைவு செய்கிறார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் நடந்தும், ஓடியும் கோபாலா.. கோவிந்தா.. என்ற சரண கோஷம் எழுப்பி கையில் பனை ஓலை விசிறியுடன் 110 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்குவார்கள். மேலும், பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து சிவராத்திரியை நிறைவு செய்கிறார்கள்.