என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்
Byமாலை மலர்9 March 2021 2:36 AM GMT (Updated: 9 March 2021 2:36 AM GMT)
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். மாலை 5 மணி முதல் இரவு 6.30 வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு பந்தக்காட்சியில் வீதி உலா வந்து தெப்ப மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார்.
பின்னர் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். மாலை 5 மணி முதல் இரவு 6.30 வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு பந்தக்காட்சியில் வீதி உலா வந்து தெப்ப மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X