search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் கமலவல்லி நாச்சியார்)
    X
    தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் கமலவல்லி நாச்சியார்)

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடக்கிறது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். மாலை 5 மணி முதல் இரவு 6.30 வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு பந்தக்காட்சியில் வீதி உலா வந்து தெப்ப மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார்.
    Next Story
    ×