என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை
    X
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று நள்ளிரவு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.
    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று நள்ளிரவு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

    இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

    காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நண்பகல் 12 மணிக்கு பருத்திவிளை மற்றும் உண்ணாமலைக்கடையில் இருந்து சந்தனகுடம் பவனி, 1 மணிக்கு உச்சிகால பூஜை, 4.15 மணிக்கு களிமார் கணேசபுரத்தில் இருந்து சந்தன குடம் பவனி, மாலை 6.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்தது.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடந்தது. இதனையொட்டி பூஜையில் பொரி, அவல், கற்கண்டு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் உள்பட பழவகைகள், மண்டையப்பம், அப்பம், அரவணை, திரளி (கொழுக்கட்டை) போன்ற வழிபாட்டு பொருட்கள் இளநீர், கரும்பு, தேங்காய் போன்றவைகள் அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அலங்கார பூஜை நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    9-ம் நாளான இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி உடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும், 10-ம் நாள் அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு நடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குதியோட்டம், இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனியும், தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
    Next Story
    ×