search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கொரோனா சான்றை கொண்டு வர வேண்டும், என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
    திருமலை :

    திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை திருமலை அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும்.

    பஞ்ச காவ்யா தயாரித்த பொருட்களை கோவிலில் விற்பனை செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பசு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அகர்பத்தி, சோப்புகள் போன்ற 15 தயாரிப்புகளையும், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 15 தயாரிப்புகளையும் திருப்பதி தேவஸ்தான பஞ்ச காவ்யா பிரிவு விரைவில் தயாரிக்கும். இதற்காக தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, அலிபிரியில் 2 இடங்களில் 2 ஆயிரம் வாகனங்களையும், திருமலையில் 2 இடங்களில் 1,500 வாகனங்களையும் நிறுத்த, வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்களின் குத்தகை காலத்தை 3 முதல் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

    திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பசுமை ஆற்றலை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 150 மின்சாரப் பஸ்களை இயக்கும் முயற்சியை அரசு போக்குவரத்துக்கழகம் மேற்கொண்டுள்ளது. தேவஸ்தான அதிகாரிகளுக்கும் மின்சார வாகனம் வழங்கப்படும். தர்மகிரியில் 25 ஏக்கரில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் 14 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.90 கோடியே 45 லட்சம் கிடைத்தது. இ.உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ரூ.3 கோடியே 51 லட்சம். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இ.உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் ரூ.12 லட்சம் ஆகும். ஸ்ரீவாரி லட்டுக்கள் 76 லட்சத்து 61 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாத் சாப்பிட்ட பக்தர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 7 ஆயிரம் பேர். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×