search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார்
    X
    உறையூர் கமலவல்லி நாச்சியார்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் 8-ந்தேதி நடக்கிறது

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா 3-ந்தேதி தொடங்கியது.

    வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார், 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். 6.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.

    இரவு 8 மணிக்கு தெப்பமண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வருகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 9-ந்தேதி பந்தக்காட்சி நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.

    இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில்இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
    Next Story
    ×