என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் 10-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்5 March 2021 1:58 PM IST (Updated: 5 March 2021 1:58 PM IST)
கல்குளத்தை சுற்றியுள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் "கோபாலா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 10-ந் தேதி தொடங்குகிறது.
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர் அரசுடன் இணைந்திருந்தது. அப்போது தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகியவற்றை வேணாடு என்றும் அழைத்தனர்.
வேணாட்டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் விளங்கியது. கல்குளத்தை சுற்றி திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிபாகம் சிவன்கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.
இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் "கோபாலா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார். அங்கிருந்து மேலாங்கோடு சிவன்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.
இவ்வாறு நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 10-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது. 10-ந் தேதி முன்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் 11-ந் தேதி நட்டாலம் கோவிலில் நிறைவு பெறுகிறது.
வேணாட்டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் விளங்கியது. கல்குளத்தை சுற்றி திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிபாகம் சிவன்கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.
இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் "கோபாலா, கோவிந்தா" என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார். அங்கிருந்து மேலாங்கோடு சிவன்கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.
இவ்வாறு நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 10-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது. 10-ந் தேதி முன்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் 11-ந் தேதி நட்டாலம் கோவிலில் நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X