search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் சந்தனகுடத்துடன் பவனியாக சென்ற போது எடுத்த படம்.
    X
    பக்தர்கள் சந்தனகுடத்துடன் பவனியாக சென்ற போது எடுத்த படம்.

    மாசிக் கொடைவிழா: மண்டைக்காட்டுக்கு சந்தன குட பவனி

    மண்டைக்காட்டில் மாசிக்கொடை விழாவில் மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து மண்டைக்காட்டிற்கு சந்தன குட பவனி சென்றது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.

    மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து சந்தனகுட ஊர்வலமானது பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 6.45 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 9 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடந்தது.

    விழாவின் 6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜை நடைபெறுகிறது.

    இந்த பூஜை வருடத்தில் மூன்று முறை நடைபெறும். கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும், மாசித் திருவிழாவின் ஆறாம் நாள் அன்றும், மீன பரணி கொடைவிழா அன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும்.
    Next Story
    ×