என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருவிழா நாளை தொடக்கம்
Byமாலை மலர்4 March 2021 4:46 AM GMT (Updated: 4 March 2021 4:46 AM GMT)
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் அய்யாவின் 189-வது அவதார தின விழா மற்றும் வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் அய்யாவின் 189-வது அவதார தின விழா மற்றும் வருடாந்திர திருவிழா நடக்கிறது. அவதார தின விழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு அன்னதானம் நடந்தது.
வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அய்யாவுக்கு பணிவிடையும், மாலை 4 மணி முதல் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.
12-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும், அதைத்தொடர்ந்து 8 மணிக்கு திருக்கல்யாண விருந்தும் நடைபெற உள்ளது.
14-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், 2 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகமும், 8 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் நையாண்டி மேளம், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பவனியும் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.15-ந்தேதி பகல் 12 மணிக்கு பார்ப்பானை வைத்து பணிவிடை நிகழ்ச்சியும், தொடர்ந்து 2 மணிக்கு அய்யா ஊர்வலமும், மாலை 4 மணிக்கு இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.
வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அய்யாவுக்கு பணிவிடையும், மாலை 4 மணி முதல் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.
12-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும், அதைத்தொடர்ந்து 8 மணிக்கு திருக்கல்யாண விருந்தும் நடைபெற உள்ளது.
14-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், 2 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகமும், 8 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் நையாண்டி மேளம், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பவனியும் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.15-ந்தேதி பகல் 12 மணிக்கு பார்ப்பானை வைத்து பணிவிடை நிகழ்ச்சியும், தொடர்ந்து 2 மணிக்கு அய்யா ஊர்வலமும், மாலை 4 மணிக்கு இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X