என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்3 March 2021 6:59 AM GMT (Updated: 3 March 2021 6:59 AM GMT)
கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.
கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் கோவையின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதல் மற்றும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கோனியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள். இந்த தேரானது ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைகிறது.
இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) பரிவேட்டை-குதிரை வாகனம், நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப திருவிழா, 6-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 8-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
கோவிலுக்கு மற்றும் தேரோட்டத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசித்து செல்ல வேண்டும் என்று அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதல் மற்றும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கோனியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள். இந்த தேரானது ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைகிறது.
இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) பரிவேட்டை-குதிரை வாகனம், நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப திருவிழா, 6-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 8-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
கோவிலுக்கு மற்றும் தேரோட்டத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசித்து செல்ல வேண்டும் என்று அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X