
தொடர்ந்து அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருமண மேடையில் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். திருக்கல்யாணத்தை செல்வசுப்ரமணிய குருக்கள் மற்றும் கோவில் முறை பண்டாரங்கள் நடத்தினர்.
திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தீச்சட்டி, மாவிளக்கு எடுத்து வந்தனர். இதற்கிடையே திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது.