search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவில்
    X
    ராமேசுவரம் கோவில்

    மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை மறுநாள் கொடியேற்றம்

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை மறுநாள்(4-ந்தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (4-ந் தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

    திருவிழாவின் 8-வது திருநாளான வருகின்ற 10-ந்தேதி மகா சிவராத்திரி அன்று வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 11-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் (பொறுப்பு) தனபால் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், செல்லம் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×