என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தெப்பத்திருவிழா
Byமாலை மலர்1 March 2021 6:03 AM GMT (Updated: 1 March 2021 6:03 AM GMT)
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் காரமடையில் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசிமக தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர் விழாவையொட்டி தினந்தோறும் இரவு அன்ன, சிம்ம, அனுமந்த வாகன உற்சவங்கள், கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த 25-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 26-ந் தேதி திருகல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
நேற்று அரங்கநாத பெருமாளின் அடியார்களான தாசர்களின் தண்ணீர் சேவை நடைபெற்றது. இதில் ஒரு பகுதி தாசர்கள் தெப்பக்குளத்தில் இருந்து தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி கையில் பிரம்பு ஏந்தி ஓட்டமும், நடையுமாக தண்ணீரை கொண்டு சென்று கோவில் வளாகத்தில் அரங்க பெருமாளுக்கு சமர்பித்தனர்.
மற்றொரு தாசர்கள் கையில் (பந்த சேவை) எனப்படும், தீபந்தங்களை எடுத்து தாரை தப்பட்டைகளுடன் தெப்பக்குளத்தில் இருந்து பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் மற்றும் 4 ரத வீதிகளில் பந்த சேவை கொண்டுவந்து கோவிலுக்கு சென்று வழிப்பட்டனர்.
இரவு 10.30 மணிக்கு அரங்கநாத பெருமாள் மன்னர் அலங்காரத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் அமர்ந்து வந்து பரிவேட்டை மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமலை மன்னன் வேடுபரி நிகழ்ச்சியையடுத்து அரங்கநாத பெருமாள் கோவிலை வந்தடைந்தார்.
இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான வந்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
தொடர்ந்து கடந்த 25-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 26-ந் தேதி திருகல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
நேற்று அரங்கநாத பெருமாளின் அடியார்களான தாசர்களின் தண்ணீர் சேவை நடைபெற்றது. இதில் ஒரு பகுதி தாசர்கள் தெப்பக்குளத்தில் இருந்து தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி கையில் பிரம்பு ஏந்தி ஓட்டமும், நடையுமாக தண்ணீரை கொண்டு சென்று கோவில் வளாகத்தில் அரங்க பெருமாளுக்கு சமர்பித்தனர்.
மற்றொரு தாசர்கள் கையில் (பந்த சேவை) எனப்படும், தீபந்தங்களை எடுத்து தாரை தப்பட்டைகளுடன் தெப்பக்குளத்தில் இருந்து பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் மற்றும் 4 ரத வீதிகளில் பந்த சேவை கொண்டுவந்து கோவிலுக்கு சென்று வழிப்பட்டனர்.
இரவு 10.30 மணிக்கு அரங்கநாத பெருமாள் மன்னர் அலங்காரத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் அமர்ந்து வந்து பரிவேட்டை மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமலை மன்னன் வேடுபரி நிகழ்ச்சியையடுத்து அரங்கநாத பெருமாள் கோவிலை வந்தடைந்தார்.
இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான வந்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X