search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    மார்ச் மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வர்ச்சுவல் (காணொலி காட்சி மூலம்) முறையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    கல்யாண உற்சவ டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் (2 பேருக்கு) 90 நாட்களுக்குள் தேவஸ்தானம் இலவச விரைவு தரிசனத்தை அளித்து வருகிறது. பக்தர்கள் அந்தத் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முன்பு செய்து கொள்ளலாம்.

    அதன் விவரம் வருமாறு:-

    9-ந்தேதி சர்வ ஏகாதசி, 24-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம், 24-ந்தேதி ஸ்மார்த ஏகாதசி, 25-ந்தேதி வைஷ்ணவ மாத்வ ஏகாதசி, 28-ந்தேதி லட்சுமி ஜெயந்தி, தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
    Next Story
    ×