
பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகியவை நடக்கிறது.
விழாவில் வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை, 8-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைக்கப்படுகிறது.
5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், 12.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.