என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மின்தேரில் பவனி
Byமாலை மலர்26 Feb 2021 7:00 AM GMT (Updated: 26 Feb 2021 7:00 AM GMT)
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று தில்லை தெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ரத வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பால், பழம் உள்ளிட்ட 20 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து அம்மன் புறப்பாடாகி மண்டகப்படிதாரர் மண்டபத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.
அதன்படி நேற்று தில்லை தெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் ரத வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பால், பழம் உள்ளிட்ட 20 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து அம்மன் புறப்பாடாகி மண்டகப்படிதாரர் மண்டபத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X