search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர்).
    X
    தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர்).

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்து, மூடிக்கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

    பல்வேறு சிறப்பு பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்து தேரடியை அடைந்தது.

    Next Story
    ×