என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
Byமாலை மலர்23 Feb 2021 6:15 AM GMT (Updated: 23 Feb 2021 6:15 AM GMT)
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
பழனி கிழக்கு ரதவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி 12-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதற்காக தேக்கந்தோட்டம் பகுதியில் இருந்து கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டு நடப்பட்டது. இதையடுத்து தினமும் பக்தர்கள் பால், மஞ்சள்நீர் ஆகியவற்றை கம்பத்தில் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளியானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார். தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளியானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார். தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X