என் மலர்
ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன்
கோட்டை மாரியம்மன் கோவில் நடை திறப்பு நேரம் அதிகரிப்பு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி கோவிலின் நடை திறப்பு நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக தினமும் மதியம் உணவு இடைவேளையின் போது கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கோவில் நடை திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, மாசித் திருவிழாவையொட்டி கோவிலின் நடை திறப்பு நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். உணவு இடைவேளையின் போது நடை அடைக்கப்படுவது இல்லை.
இந்த நடைமுறை அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி அதாவது மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நடைபெறும் நாள் வரை கடைபிடிக்கப்படும் என்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, மாசித் திருவிழாவையொட்டி கோவிலின் நடை திறப்பு நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். உணவு இடைவேளையின் போது நடை அடைக்கப்படுவது இல்லை.
இந்த நடைமுறை அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி அதாவது மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நடைபெறும் நாள் வரை கடைபிடிக்கப்படும் என்றனர்.
Next Story






