search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது
    X
    திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது

    திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது

    திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சுழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்றும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 26-ந் தேதி மாசி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.
    Next Story
    ×