
அதை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து கொடிமரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர்கள் சண்முகராஜ், பூமிநாதன், சிவக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.