
இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேக தீபாராதனை, மாலையில் மண்டகப்படி பூஜை மற்றும் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகின்றன.
விழாவின் 9-ம் நாளான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.