search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாசி தெப்பத்திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
    X
    மாசி தெப்பத்திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

    மாசி தெப்பத்திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு 4 முறை கருட சேவை நடைபெறுகிறது. இதில் மூன்று கருட சேவைகளின் போது தங்கக்கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருவார். ஆனால் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் 4-ம் திருநாள் மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருவார். மாசிக்கருடனை தரிசிப்பது காசிக்குச் சென்ற பலன் தரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

    அதன்படி மாசி தெப்பத்திருவிழாவின் 4-ம் நாளான நேற்று வெள்ளி கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    Next Story
    ×