search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன்
    X
    மீனாட்சி அம்மன்

    தங்க கவசம், வைர கிரீடத்தில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிபட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டு தை அமாவாசை தினமான நேற்று மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிபட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இது தவிர அமாவாசை என்பதால் அம்மனுக்கும், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. அதனை காண மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மேலும் தை அமாவாசையொட்டி இறந்தவர்களுக்கு கோவில்களிலும், நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தற்போது கொரோனா தடை உத்தரவு காரணமாக முக்கியமான பெரிய கோவில்களில் தர்ப்பணம் கொடுக்க விதிக்கப்பட்டது. மதுரை வைகை ஆற்றிலும், எஸ்.எஸ்.காலனி, மேலமடை, கோமதிபுரம் பகுதியில் உள்ள சிறிய கோவில்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
    Next Story
    ×