என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நாளை நடக்கிறது
Byமாலை மலர்11 Feb 2021 9:02 AM GMT (Updated: 11 Feb 2021 9:02 AM GMT)
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசித்திருவிழா இன்று (வியாழக்கிழமை) பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா, 14-ந்தேதி சாமி சாட்டுதல், 16-ந்தேதி திருவிழா கொடியேற்றம், 27-ந்தேதி தசாவதார நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியிறக்கம், 2-ந்தேதி தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
இதில் நாளை ஸ்ரீஐயப்பன் பூச்சொரிதல் குழு சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஏகதீப ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர் குழு ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி நாகராஜ் தலைமையில் தெய்வீகவாழை கற்பூர பூஜை, தெய்வரூப ஆகாய தீபதரிசனம், பூஜை நடக்கிறது.
இதையடுத்து 10 நிமிடம் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு பூத்தேர் வீதிஉலா தொடங்குகிறது. அப்போது பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பின்னர் கோவிலில் இருந்து தொடங்கும் பூத்தேர் வீதிஉலா மேற்கு ரதவீதி, பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம் மேற்கு கரை, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைகிறது. இந்த பூத்தேர் வீதிஉலாவின் போது பக்தர்கள், பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த பூக்களை கொண்டு கோட்டை மாரியம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னர் மாலையில் பூத்தேர் வீதிஉலா தொடங்கி தாலுகா அலுவலக சாலை, பழனி சாலை வழியாக ஸ்ரீதுர்க்கை பூஜை மண்டபத்தை சென்றடைகிறது.
இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா, 14-ந்தேதி சாமி சாட்டுதல், 16-ந்தேதி திருவிழா கொடியேற்றம், 27-ந்தேதி தசாவதார நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியிறக்கம், 2-ந்தேதி தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
இதில் நாளை ஸ்ரீஐயப்பன் பூச்சொரிதல் குழு சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஏகதீப ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர் குழு ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி நாகராஜ் தலைமையில் தெய்வீகவாழை கற்பூர பூஜை, தெய்வரூப ஆகாய தீபதரிசனம், பூஜை நடக்கிறது.
இதையடுத்து 10 நிமிடம் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு பூத்தேர் வீதிஉலா தொடங்குகிறது. அப்போது பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பின்னர் கோவிலில் இருந்து தொடங்கும் பூத்தேர் வீதிஉலா மேற்கு ரதவீதி, பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம் மேற்கு கரை, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைகிறது. இந்த பூத்தேர் வீதிஉலாவின் போது பக்தர்கள், பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த பூக்களை கொண்டு கோட்டை மாரியம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னர் மாலையில் பூத்தேர் வீதிஉலா தொடங்கி தாலுகா அலுவலக சாலை, பழனி சாலை வழியாக ஸ்ரீதுர்க்கை பூஜை மண்டபத்தை சென்றடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X