
இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தினர். இதைதொடர்ந்து 10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் தேங்காய், பழம், மாலைகள் வைத்து அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி இந்த கோவில்களில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தேங்காய் பழங்கள் வைத்து சாமி கும்பிட்டு செல்கின்றனர்.