search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    ஞானத்தின் உருவமான முருகன்

    நாம் பெற்ற கல்வியும், ஞானமும் உள்ளத்து உணர்வையும், மெய் பொருளையும் தருபவை. ஆனால் அந்த ஞானத்தின் சிற்றின்பத்தை போக்கி வீடுபேறு என்கிற பேரின்பத்தை தருபவன் முருகப்பெருமான் மட்டுமே.
    செந்தமிழை தனது அடையாளமாகவும், ஞானத்தை உருவாகவும் கொண்டவன் தமிழ்க்கடவுன் முருகன். அறுசுவைகளை எழுத்துகளில் சொல்லி விடலாம். ஆனால் அதை உணர்வது, உணர்த்துவது புலன்கள் மட்டுமே. அதைப்போல அருளை பெற வேண்டுமானால் சமயம் (சமையல்) உணர்த்தும் (பக்குவம்) பக்தி நிலைகளை கடைபிடித்து உய்த்துணர்தல் வேண்டும். அவ்வையார் என்ற தமிழ் பெருமாட்டிக்கு செருக்கு வந்தபோது நாவல் பழத்தின் மூலம் ஞானத்தை ஊட்டியவன் முருகப்பெருமான். நாம் பெற்ற கல்வியும், ஞானமும் உள்ளத்து உணர்வையும், மெய் பொருளையும் தருபவை. ஆனால் அந்த ஞானத்தின் சிற்றின்பத்தை போக்கி வீடுபேறு என்கிற பேரின்பத்தை தருபவன் முருகப்பெருமான் மட்டுமே.

    மமதை என்பது வரும்போது சிறு பிழைகன் கூட துன்பத்தில் ஆழ்த்திவிடும். அந்த மாய வலையில் சிக்காது இருக்க வேண்டும். அறிவழிந்து தற்போதைய சுகத்தை மட்டும் விரும்புபவர்கள் மற்றவர்கள் மீதும் அவர்களின் இன்பத்தின் மீதும் பழி தூற்றுபவர்களை முருகன் எப்போதும் தண்டாயுதம் கொண்டு தட்டியே வைப்பான். எந்தாயுதமென கருட் தந்தையுநீ சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் என்று நினைக்கும் போது மட்டுமே நம்மை நயமுற காப்பான் முருகன்.

    முருகனின் திருப்பாதங்களை நினைக்க வேண்டும். அல்லாமல் அடுத்தவரை பழி தூற்றுவதோ துன்புறுத்துவது குறித்தோ நினையாதிருத்தல் வேண்டும். கடம்ப மலரின் காட்சியாய் கண்ணில் குளிர்ச்சியாய் வீற்றிருப்பவன். தன்னலம் கருதாது பிறர் துயரினை நீக்குபவன். அதர்மங்களை அழிப்பவன். தன்னை நம்புபவர்களை காப்பதோடு நல்லறிவை போதிப்பவனாகவும், பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு அறிவுறுத்தியவனாகவும் உள்ளான். எனவே அவன் பாதம் பணிந்து நல்லருளை பெறுவோம்.
    Next Story
    ×