
இதனை தொடர்ந்து நேற்று காலை 10. 30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து முத்துக்குமாரசாமி புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 5 சுவாமிகளும் சோமரசம்பேட்டை 4 வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்குமேல் சுவாமிகள் ரத்தம் கோயிலுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.