என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆளும் பல்லக்குடன் தைத்தேர் திருவிழா நிறைவு
Byமாலை மலர்30 Jan 2021 3:58 AM GMT (Updated: 30 Jan 2021 3:58 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைத்தேர் திருவிழா ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார். பின்னர், இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமார், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார். பின்னர், இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமார், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X