என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்27 Jan 2021 2:47 AM GMT (Updated: 27 Jan 2021 2:47 AM GMT)
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மூலவராக வெங்கடாசலபதியும், வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடது புறம் பூதேவியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.
இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வருஷாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை, 9 மணிக்கு புண்ணி யாகவாசனம், 10 மணிக்கு சத்த கலச பூஜை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், 11 மணிக்கு யாகசாலைபூஜையும், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இந்த பூஜைகளை பாலாஜி அர்ச்சகர் தலைமையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் மோகன், ஆய்வாளர் சாய் கிருஷ்ணா ஆகியோர் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மூலவராக வெங்கடாசலபதியும், வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடது புறம் பூதேவியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.
இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வருஷாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை, 9 மணிக்கு புண்ணி யாகவாசனம், 10 மணிக்கு சத்த கலச பூஜை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், 11 மணிக்கு யாகசாலைபூஜையும், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இந்த பூஜைகளை பாலாஜி அர்ச்சகர் தலைமையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் மோகன், ஆய்வாளர் சாய் கிருஷ்ணா ஆகியோர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X