search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்
    X
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் 28-ந்தேதி நடக்கிறது

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகையுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் நாளான வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
    Next Story
    ×