search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
    X
    தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் :

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு 4 உத்திரை வீதியில் வலம் வந்ததார்.

    பின்னர் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி வீரேஸ்வரம் ஆஸ்தானம் மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.

    28-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல்பொறுப்பு), உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×