search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கல்நிலை நடும் விழா
    X
    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கல்நிலை நடும் விழா

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கல்நிலை நடும் விழா

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது.
    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நடந்தது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமை தாங்கி, கல் நிலை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுச்செயலாளர் பொன்னுத்துரை, இணை தலைவர்கள் பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, அய்யாப்பழம், ராஜதுரை, துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் தங்கம், செல்வின், வரதராஜ பெருமாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, இளங்கோ மற்றும் பேராசிரியர் ஸ்ரீமதி, சங்கரன், கணேசன், கண்ணன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×