search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம்
    X
    கும்பாபிஷேகம்

    சாணார்பட்டி அருகே அத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    சாணார்பட்டி அருகேயுள்ள கணவாய்பட்டி ஊராட்சி கொரசினம்பட்டியில் அத்தி விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சாணார்பட்டி அருகேயுள்ள கணவாய்பட்டி ஊராட்சி கொரசினம்பட்டியில் அத்தி விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் தொழிலதிபர் அமர்நாத், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் இளம்வழுதி, கணவாய்பட்டி ஊராட்சி தலைவர் நிஷா, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×