search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில்
    X
    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில்

    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் 14-ந் தேதி மகரஜோதி விழா

    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் ஆண்டுதோறும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வேதனைக்குள்ளானார்கள்.

    சிலர் யாத்திரை தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் மாலை அணிந்து இருமுடி கட்டி 18 படிகள் இருக்கும் ஐயப்பன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னை யில் மடிப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு செல்கிறார்கள்.

    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி விழா நடைபெறுகிறது.

    அதுவரை தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை பதினெட்டாம் படி வழியாக சென்று ஐயப்ப பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×