என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் 14-ந் தேதி மகரஜோதி விழா
Byமாலை மலர்11 Jan 2021 7:51 AM GMT (Updated: 11 Jan 2021 7:51 AM GMT)
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனால் ஆண்டுதோறும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வேதனைக்குள்ளானார்கள்.
சிலர் யாத்திரை தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் மாலை அணிந்து இருமுடி கட்டி 18 படிகள் இருக்கும் ஐயப்பன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை யில் மடிப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு செல்கிறார்கள்.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி விழா நடைபெறுகிறது.
அதுவரை தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை பதினெட்டாம் படி வழியாக சென்று ஐயப்ப பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X