என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்த சாமி-அம்பாள்
    X
    ராமேசுவரம் கோவில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்த சாமி-அம்பாள்

    ராமேசுவரம் கோவில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்த சாமி-அம்பாள்

    மார்கழி மாத அஷ்டமியையொட்டி ராமேசுவரத்தில் கோவில் அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ஒரு முறை சுற்றி வந்து அஷ்டமி சப்பரம் நிகழ்ச்சி நிறைவடைந்தது
    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் அஷ்டமி அன்று கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

    இவ்வாறு மார்கழி மாத அஷ்டமி அன்று சாமி அம்பாள் நேரடியாக பக்தர்களை தேடி வந்து படி அளப்பதாக நம்பப்படுகின்றது.

    இவ்வாறு நகர் முழுவதும் வரும் சாமிக்கு முன்பு பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து மாலை அணிவித்து தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு நேற்று சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ஒரு முறை சுற்றி வந்து அஷ்டமி சப்பரம் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    சாமி அம்பாள் 3-ம் பிரகாரத்தைசுற்றி வந்து கோவிலின் 2-ம் பிரகாரத்தில் வைக்கப்பட்டு வாகனத்தில் இருந்து சாமியை குருக்கள் சேர்ந்து இறக்க முயன்றபோது அங்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில், இளைஞர் அணி செயலாளர் சரவணன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சாமியின் வாகனம் முன்பு நின்று ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி அன்று சாமி அம்பாள் கோவிலை விட்டு வெளியே சுற்றி வந்து பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது போல் இன்றும் நடைபெற வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா சாமி முன்பு நின்று போராட்டம் நடத்த வேண்டாம். அனுமதி இல்லாமல் கோவிலுக்குள் போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தார். அதற்கு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவில்லை. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பூஜை உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கேட்கிறோம் என தெரிவித்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனுமதியில்லாமல் தடையை மீறி கோவிலுக்குள் போராட்டம் நடத்தியதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×