என் மலர்
ஆன்மிகம்

மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை நடக்கிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. 9 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் சாமி கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர சாமி புறப்பாடு நாளை(புதன்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலையில் அஷ்டமி சப்பரங்களில் எழுந்தருளுவார்கள். அங்கிருந்து காலை 5 மணிக்கு சப்பரங்கள் புறப்பாடாகி வடக்கு நோக்கி யானைக்கல், வடக்குவெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளிவீதி, குட்ஷெட்தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் சாமி கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இதனை காண பக்தர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள்.
Next Story






