என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராப்பத்து திருவிழா நிறைவு: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்
Byமாலை மலர்4 Jan 2021 8:09 AM GMT (Updated: 4 Jan 2021 8:09 AM GMT)
திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பகல் பத்து திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிய நடந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதைதொடர்ந்து 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அன்று முதல் நேற்று வரை ராப்பத்து திருவிழாவுடன் 10 நாள் விழாநிறைவு பெற்றது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரத் துடன், பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ராப்பத்து கடைசி நாளான நேற்று திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X