என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
துவரிமான் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
Byமாலை மலர்21 Aug 2019 4:48 AM GMT (Updated: 21 Aug 2019 4:48 AM GMT)
துவரிமான் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரையை அடுத்த துவரிமான் கிராமத்தில் பிரசித்திபெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 77-வது ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. மழை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். அப்போது அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.
சிறுவர்-சிறுமிகள் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்பிறகு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மேலும் குழந்தைகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கோவிலை வலம் வந்தனர். தினசரி கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகளும், அன்னதான நிகழ்ச்சியும் திருவிழாவையொட்டி நடைபெற்றது.
சிறுவர்-சிறுமிகள் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்பிறகு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மேலும் குழந்தைகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கோவிலை வலம் வந்தனர். தினசரி கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகளும், அன்னதான நிகழ்ச்சியும் திருவிழாவையொட்டி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X