என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகர்களின் அரசனான தட்சகன்
Byமாலை மலர்28 May 2019 6:43 AM GMT (Updated: 28 May 2019 6:43 AM GMT)
காசிப முனிவருக்கும், கத்ரு என்ற பெண்ணுக்கும் பிறந்த நாக குலத்தினர்களின் ஒருவனான தட்சகன் நாகர்களின் அரசனாக இருந்தவன். இவரது வரலாற்றை பார்க்கலாம்.
காசிப முனிவருக்கும், கத்ரு என்ற பெண்ணுக்கும் பிறந்த நாக குலத்தினர்களின் ஒருவன், இந்த தட்சகன். இவன் நாகர்களின் அரசனாக இருந்தவன். இவன் காண்டவ வனத்தில் தன் இனத்தைச் சார்ந்தவர்களுடன் வாழ்ந்த வேளையில், ஒருமுறை தட்சகன் குருசேத்திரம் சென்றிருந்தான். அப்போது இந்திர பிரஸ்தம் என்ற நகரை நிர்மாணிக்கும் பொருட்டு, தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக மாற்றினான் அர்ச்சுனன். அதில் தட்சகனின் குடும்பம் முழுவதும் அழிந்தது. தட்சகனின் மகன் அஸ்வசேனன் மட்டுமே உயிர் பிழைத்தான்.
ஒரு முறை அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன், மவுன விரதத்தில் இருந்த முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பை போட்டு அவமதித்தான். அந்த முனிவரின் மகன், பரீட்சித்து மன்னன், 7 நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்று சாபமிட்டான். அதன்படி 7-ம் நாள் பரீட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறந்து போனான்.
தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர் குலத்தையே வேரோடு அழிக்க நினைத்த பரீட்சித்து மன்னனின் மகன் ஜனமேஜயன், நாக வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்வியில் நாகர் இனத்தைச் சேர்ந்த அனைவரும் விழுந்து இறந்தனர். தட்சகன் தன்னுடைய நண்பனான தேவலோகத்தின் தலைவன் இந்திரனின் உதவியை நாடினான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து ஆஸ்திகர் என்ற முனிவர், ஜனமேஜயனிடம் பேசி, நாகவேள்வியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.
ஒரு முறை அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்து மன்னன், மவுன விரதத்தில் இருந்த முனிவரின் கழுத்தில் இறந்த பாம்பை போட்டு அவமதித்தான். அந்த முனிவரின் மகன், பரீட்சித்து மன்னன், 7 நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்று சாபமிட்டான். அதன்படி 7-ம் நாள் பரீட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறந்து போனான்.
தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர் குலத்தையே வேரோடு அழிக்க நினைத்த பரீட்சித்து மன்னனின் மகன் ஜனமேஜயன், நாக வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்வியில் நாகர் இனத்தைச் சேர்ந்த அனைவரும் விழுந்து இறந்தனர். தட்சகன் தன்னுடைய நண்பனான தேவலோகத்தின் தலைவன் இந்திரனின் உதவியை நாடினான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து ஆஸ்திகர் என்ற முனிவர், ஜனமேஜயனிடம் பேசி, நாகவேள்வியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X