என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்9 May 2019 5:49 AM GMT (Updated: 9 May 2019 5:49 AM GMT)
திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவெறும்பூரில் பிரசித்தி பெற்ற நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவில் 63 நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நேற்று இரவு அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் ஆகியவை நடைபெற்றது. இன்று மாலை பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதிஉலாவும், நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சேஷ வாகனம், அன்னவாகனத்திலும், நாளைமறுநாள்(சனிக்கிழமை) சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
12-ந்தேதி மாலை கைலாச வாகனம், அன்னவாகனத்திலும், 13-ந்தேதி இடப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலையில் யானைவாகனம், பல்லக்கில் வீதிஉலாவும் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோ.ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ஹேமாவதி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இதையொட்டி நேற்று இரவு அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் ஆகியவை நடைபெற்றது. இன்று மாலை பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதிஉலாவும், நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சேஷ வாகனம், அன்னவாகனத்திலும், நாளைமறுநாள்(சனிக்கிழமை) சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
12-ந்தேதி மாலை கைலாச வாகனம், அன்னவாகனத்திலும், 13-ந்தேதி இடப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலையில் யானைவாகனம், பல்லக்கில் வீதிஉலாவும் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோ.ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ஹேமாவதி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X