search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவத்தின் போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்)
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவத்தின் போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்)

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். 8-ந் தேதி முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    14-ந்தேதி காலை பல்லக்கிலும், இரவு மரக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. கடந்த 17-ந்தேதி இரவு வெள்ளி காமதேனு வாகனத்திலும், 18-ந்தேதி, முத்துபல்லக்கிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றடைந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    அப்போது மேள, தாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் அம்மன் தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் வழிநடை உபயம் கண்டருளி அம்மன் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர். 
    Next Story
    ×