என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப திருவிழா நிறைவு
Byமாலை மலர்22 March 2019 5:58 AM GMT (Updated: 22 March 2019 5:58 AM GMT)
மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.
மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும்-அம்பாளும் மலைக்கோட்டை உள்வீதி, வெளிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று காலை கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானை ஒரு வாகனத்திலும், அம்பாள், சுவாமி-அம்பாள் ஒரு வாகனத்திலும் புறப்பாடாகி தெப்பக்குளம் வந்தடைந்தனர்.
மதியம் தெப்பக்குளத்தில் அனைத்து விதமான அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மீண்டும் புறப்பாடாகி ஆண்டார் வீதி, சறுக்குப்பாறை வழியாக கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர் மலைக்கோட்டையில் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து கோவில் குருக்களை கோவில் முன்பு இருந்து மரியாதை செய்யும் விதமாக இரவு 12 மணியளவில் யானை மீது அமர வைத்து அவரது வீட்டில் கொண்டு போய் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று காலை கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானை ஒரு வாகனத்திலும், அம்பாள், சுவாமி-அம்பாள் ஒரு வாகனத்திலும் புறப்பாடாகி தெப்பக்குளம் வந்தடைந்தனர்.
மதியம் தெப்பக்குளத்தில் அனைத்து விதமான அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மீண்டும் புறப்பாடாகி ஆண்டார் வீதி, சறுக்குப்பாறை வழியாக கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர் மலைக்கோட்டையில் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. இதையடுத்து கோவில் குருக்களை கோவில் முன்பு இருந்து மரியாதை செய்யும் விதமாக இரவு 12 மணியளவில் யானை மீது அமர வைத்து அவரது வீட்டில் கொண்டு போய் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X