search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவனைப் போற்றும் ஒப்பற்ற ராத்திரி
    X

    சிவனைப் போற்றும் ஒப்பற்ற ராத்திரி

    மகா சிவராத்திரி தினத்தில், கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை பக்தியுடன் வணங்கி வழிபட்டால் மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
    பவுர்ணமி திதியைத் தொடர்ந்து வரும் 14-வது நாளான தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரியாக கடைப்பிடிக்கிறோம். மாதம் தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே, ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது.

    அழிவுக்குள்ளான உலகமும் உயிர்களும் சிவனருளால் மீண்டும் உருவான நன்னாளே மகா சிவராத்திரி என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாளின் சிறப்புகள் பற்றி கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் போன்ற நூல்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி தினத்தில், கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை பக்தியுடன் வணங்கி வழிபட்டால் மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சேரும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×