search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடவரை நரசிம்மர் பெருமை
    X

    குடவரை நரசிம்மர் பெருமை

    குடவரை ஸ்ரீநரசிம்மர் திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மர் கோவில் ஊருக்கு நடுநாயகமாக விளங்கும் குன்றின் மேல்புரத்தில் அமைந்திருக்கும் குடவரையில் அமைந்துள்ளது. ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜிக முனிவர்களான சனக சனந்தர்களும், கவரி வீசும் சூர்ய சந்திரர்களும், அடுத்து வலது புறம் ஈஸ்வரரும், இடது புறம் நான்முகனும் (பிரம்மா) பகவான் இரணியனை வதைத்த உக்ரம் தணிவதற்கு வழிபடுகிறார்கள்.

    ஸ்ரீமகாலட்சுமியின் தவத்தினால் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் மூவரும் ஒரே ஆலயத்தில் பூஜிக்கப்படுவதால் திருமூர்த்தித் தலம் எனும் புகழுடையது. இவ்வூரில் தனிப்பட்ட சிவ ஆலயம் என்று ஏதொன்றும் கிடையாது.
    பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியின் அபயமளிக்கும் வலது கையில் இரணிய சம்ஹாரம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் காணலாம் என்பர்.

    கர்ப்பக்கிரகம் (கருவறை, அர்த்தமண்டபம் இவை குடவரையில் அமைந்துள்ளது) இத்திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மரின் பெருமை கூறவொண்ணாதது.

    இந்த கோவிலின் கருவறை குடவரையில் பக்கங்களில் ஸ்ரீவைகுண்ட நாதர், ஹிரண்யசம்ஹார நரசிம்மர் (உக்ரநரசிம்மர்), மறுபுறம் வாமனமூர்த்தி, உலகளந்தப் பெருமாள், வராஹமூர்த்தி முதலிய மூர்த்திகள் வெகு அழகாக சிற்பவடிவில் காட்சி கொடுக்கின்றனர். குடவரை வெகு அழகாகவும், நல்ல வேலைப்பாடுகளும், ஆறுகம்பங்களும், மேலே கொடுங்கை முதலியனவைகளுடன் அமையப் பெற்றிருக்கிறது. இக்குடவரையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கு முக்காலங்களிலும் பூஜை நடந்து வருகிறது.

    இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
    Next Story
    ×