search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொட்டில் கட்டினால் கை மேல் பலன்
    X

    தொட்டில் கட்டினால் கை மேல் பலன்

    சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.
    சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பெரிய மலைக்கு ஏறிச் செல்லும் போது படிக்கட்டு ஓரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் தொட்டில் கட்டி தொங்க விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சில பெண்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் சேலை முந்தானையில் கொஞ்சம் கிழித்து, அதையே தொட்டில் போல் கட்டி தொங்க விட்டு நரசிம்மரை வழிபடுகிறார்கள்.

    இந்த வழிபாடு காரணமாக உடனே புத்திரபாக்கியம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது புது வீடு வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மலையில் கற்களை அடுக்கி வைக்கிறார்கள். இந்த நம்பிக்கை மூலம் வீடு வாங்கும் யோகம் உருவாகிறது.
    Next Story
    ×