search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்மாசனத்தில் திருச்சானூர் பத்மாவதி
    X

    பத்மாசனத்தில் திருச்சானூர் பத்மாவதி

    திருச்சானூர் திருக்கோவிலில் மலர்களை ஏந்திய மேலிரு கரங்களுடனும், அபய, வரத முத்திரைகளுடைய கீழிரு கரங்களுடனும், அழகு வடிவுடனும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி தாயார் அருள்புரிகிறாள்.
    ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூரில் பத்மாவதி தாயார் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரை தரிசிக்காவிட்டால் வேங்கடவனை தரிசித்தும் திருப்பதி யாத்திரை நிறைவு பெறாது என்று சொல்வார்கள்.

    திருச்சானூரில் பத்மாவதி தாயார் அழகு மிகு அருள்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். மலர்களை ஏந்திய மேலிரு கரங்களுடனும், அபய, வரத முத்திரைகளுடைய கீழிரு கரங்களுடனும், அழகு வடிவுடனும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி தாயார் அருள்புரிகிறாள்.

    கிழக்கே துவஜஸ்தம்பமும், உட்சுவரில் கருடாழ்வார், நம்மாழ்வார், எம்பெருமானார் சன்னதிகளும், ரங்கமண்டபமும் உள்ளது. நுழைவு வாயிலின் நேர் எதிரில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. சுகமுனிவர் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் எடுத்த கோவில் இது என்கிறது புராணம்.

    இங்கு வழிபட விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக பெண்கள் திருமணத்துக்காக வேண்டிக் கொண்டு தங்கம் காணிக்கை செய்வது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது.
    Next Story
    ×