என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்30 Jun 2018 3:36 AM GMT (Updated: 30 Jun 2018 3:36 AM GMT)
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில். இந்த கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கணபதி ஹோமத்துட விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணா குதி நடந்தது. பின்னர் மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்று முறை நடக்கிறது.
நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடந்து, காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்று முறை நடக்கிறது.
நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடந்து, காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X