search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கம்மாபுரம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    கம்மாபுரம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    கம்மாபுரம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    கம்மாபுரம் அருகே சொட்டவனம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திரவுபதி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினார். பின்னர் அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கம்மாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர் 
    Next Story
    ×