search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கார்த்திகை உற்சவ கொடியேற்றம் நடந்தது. சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அப்போது பிரியா விடையுடன் சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 2-ந்தேதி திருக்கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது. அன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும்.

    திருக்கார்த்திகை அன்று இரவு சுவாமி, அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழ மாசிவீதியில் எழுந்தருளுகின்றனர்.

    அம்மன் மற்றும் சாமி சன்னதி தேரடி அருகே உள்ள பூக்கடைதெருவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோன்று மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவில்களான தெப்பக் குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், பேச்சியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் வருகிற 2-ந்தேதி அன்று திருக்கார்த்திகையை யொட்டி கோவில் முழுவதும் அகல்விளக்குகள் ஏற்றி சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும்.

    மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை யில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
    Next Story
    ×