search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    நாளை புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடக்கிறது

    கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கடந்த 28-ந் தேதி குருத்தோலை திருநாள் நடந்தது. அன்று முதல் ஈஸ்டர் திருநாள் வரை புனித வாரம் கடைபிடிக்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்படும்.

    இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

    சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் நாளை நடை பெறுகிறது. சீரோ மலபார் சபை ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

    மார்தோமா சபையின் ஆலயங்கள் மற்றும் தாம்பரம் பகுதியில் உள்ள இச்சபையின் ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    பாடி பெத்தேல் ஆலயத்திலும் நாளை புனித வெள்ளி வழிபாடுகள் நடைபெறுகிறது. இதுபோல செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆலயம் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பாரிமுனை, சின்னமலை, சாந்தோம், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெறும். கத்தோலிக்க சென்னை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி சாந்தோம் ஆலயத்தில் பங்கேற்று நற்செய்தி அளிக்கிறார்.

    சி.எஸ்.ஐ. கதிட்ரல் தேவாலயத்தில் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்து கொள்கிறார். சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பகல் 11.30 மணிக்கு புனித வெள்ளி வழிபாடு தொடங்கி 3 மணி நேரம் நடைபெறும். இதேபோல இ.சி.ஐ. பெந்தே கோஸ்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று மாலை புனித வியாழன் வழிபாடுகள் நடைபெறுகிறது. இதில் பாதம் கழுவும் சடங்குகள் நடக்கிறது. தொடர்ந்து நற் கருணை ஆராதனை நடை பெறுகிறது.

    கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளில் பங்கேற்போர் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வருகிற ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றும் அனைத்து ஆலயங்களிலும் விசே‌ஷ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும்.

    இதுவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×